மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று (செவ்வாய்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர்,  “கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஜூன் 30ஆம் திகதிவரை முழுநேர ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு  அடையாள அட்டை வைத்துள்ள 13.35 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணமாக 1000 ரூபாய் வழங்கப்படும்” என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.