வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று முன்தினம் (24) 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மேலும் 450 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் நேற்று (25) கிடைக்கப்பெற்ற அறிக்கையில் மேலும் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 21 பெண்களும் 7 ஆண்களும் அடங்குவதுடன் அம்பகமுவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருப்பதாக தெரிய வருகிறது.
கடந்த 14 ஆம் திகதி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த மவுண்ட்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது.
இதுவரையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 39 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு தொற்று......
- Master Admin
- 26 December 2020
- (343)

தொடர்புடைய செய்திகள்
- 16 May 2023
- (226)
யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரி...
- 14 June 2025
- (138)
போகாத தழும்புகளை எளிதில் போக்க வேண்டுமா?...
- 19 January 2024
- (1113)
இந்த செடிகள் வீட்டில் இருக்கா... உடனே அப...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.