தமிழ் தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்போது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் சமந்தா நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வீட்டிலேயே விவசாயம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது மீண்டும் அவர் தனது வீட்டில் செடிகளை வளர்ப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியபோது ’பலர் என்னிடம் உங்களுடைய ஹாபி என்ன’ என்று கேட்டபோது நான் ’நடிப்பு’ என்று கூறினேன். அதற்கு அவர்கள் ’நடிப்பு உங்கள் தொழிலில் உங்கள் ஹாபி என்ன’ என்று மீண்டும் கேட்டபோது மீண்டும் ’நடிப்பு தான்’ என்று கூறினேன். ’உண்மையில் எனது தொழில் வீட்டில் செடிகளை வளர்ப்பது தான். இதில் கிடைக்கும் மன நிம்மதி எதிலும் கிடையாது’ என்று சமந்தா கூறியுள்ளார்.
இதனை அடுத்து சமந்தா முழுநேர விவசாயி ஆகிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.