ஜம்மு – காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில்  250 – 300 பயங்கரவாதிகள் ஊடுருவ நேரம் பார்த்து காத்துக்கொண்டிருப்பதாக பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் சுரீந்தர் பன்வார் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ கடந்த ஆண்டு  140 பயங்கரவாதிகள் நம் பகுதிக்குள் ஊடுருவினர்.

இந்த ஆண்டு பல்வேறு ஊடுருவல் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. இதுவரை 25 – 30 பயங்கரவாதிகள் இந்த ஆண்டு ஊடுருவி உள்ளனர்.

மேலும் 250 முதல் 300 பயங்கரவாதிகள் வரை  எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் காத்திருக்கின்றனர். கடும் பனிப்பொழிவு காலம் துவங்குவதற்கு முன் ஊடுருவ அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.