தாய்லாந்து மன்னரின் வைப்பாட்டியின் 1,400 நிர்வாண படங்கள் பிரித்தானிய பத்திரிகையாளருக்கு அனுப்பப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்கு பேர் போனவர் தாய்லாந்து மன்னரான Maha Vajiralongkorn (67). தாய்லாந்து வரலாற்றிலேயே 100 ஆண்டுகளில் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக வைப்பாட்டி என்னும் பதவியை Sineenat Wongvajirapakdi (35) என்னும் தனது பாதுகாவலரான பெண் ஒருவருக்கு மன்னர் கொடுத்தபோது, உலகமே அவரை ஒரு மாதிரியாக பார்த்தது.
ஆனால், அக்டோபர் மாதம் Sineenatஐ திடீரென சிறையில் அடைக்க உத்தரவிட்டார் Vajiralongkorn. ராணியான Suthidaவின் (43) இடத்தை Sineenat கைப்பற்றமுயல்வதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
எதிரி ஒழிந்தாள் என நிம்மதியாக Suthida ஒரு பெருமூச்சு விடுவதற்குள், Sineenat ஒரு குற்றமும் செய்யவில்லை என்று கூறி விடுவிக்கப்பட்டு மன்னரின் அழகிப்படையில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
இந்நிலையில்தான் Sineenatஇன் 1,000க்கும் மேலான நிர்வாண படங்கள் Andrew MacGregor Marshall என்னும் பிரித்தானிய பத்திரிகையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஏற்கனவே தாய்லாந்து மன்னர் Vajiralongkornஐ பத்திரிகைகளில் கிழித்து தொங்கவிடுவார் Andrew, இந்நிலையில் அவருக்கு பெரும் உதவியாக இந்த படங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அத்துடன், தாய்லாந்து கல்வியாளரான Pavin Chachavalpongpun என்பவருக்கும் அந்த படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. Chachavalpongpun, மன்னரை விமர்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டதால் ஜப்பானுக்கு சென்றுவிட்டார்.
இப்படிப்பட்ட சூழலில் அந்த படங்கள் மன்னரை எதிர்க்கும் அவர்கள் இருவருக்கும் அனுப்பப்பட்டதால், இந்த விடயத்தின் பின்னணியில் Suthidaதான் இருப்பார் என கருதப்படுகிறது.
சிறைக்கு சென்ற Sineenat, மீண்டும் மன்னருடன் இனைந்துவிட்டதால், அவரை பழிவாங்க இந்த படங்களை ராணி அனுப்பியிருக்கலாம் என கருதப்படுகிறது.