லண்டனில் இடம்பெற்ற போராட்டங்களில் வன்முறையில் ஈடுபட்ட சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் பெரும்பாலானவர்கள் பொலிஸாரை தாக்கியவர்கள் என்றும் அவர்களில் சிலர் தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் என்றும் ஆயிரக்கணக்கானோர் சிலைகளை பாதுகாப்பதாகக் கூறி கூடியவர்கள் என்றும் பொ லிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வன்முறை போராட்டங்கள் குறித்து நேற்று (சனிக்கிழமை) கருத்து தெரிவித்திருந்த பிரதமர் பொரிஸ் ஜோன்சன் “இனவெறி குண்டர்களுக்கு எங்கள் வீதிகளில் இடமில்லை” என கூறினார்.
நேற்று சனிக்கிழமையன்று, லண்டன் மற்றும் நாடு முழுவதும் பல அமைதியான இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.
குறித்த போராட்டத்தின்போது 2017 வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட கீத் பால்மரின் நினைவிடத்திற்கு அருகில் ஒருவர் சிறுநீர் கழித்தமை குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சின் செயலாளர் பிரிதி படேல், பால்மரின் நினைவிடத்தை “இழிவுபடுத்துவது” முற்றிலும் வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டுள்ளார்.