மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட பாங்கர் நகரில் கட்டக்புகார் பஜார் அமைந்திருக்கிறது. இங்குள்ள ஒரு மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தில் மின்கசிவால் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த மண்ணெண்ணெய் பேரல்கள், தீயுடன் வெடித்துச் சிதறின. அதில், அருகில் இருந்த ஓர் உணவகம், கடை, வீட்டுக்கும் தீ பரவியது.
உணவகத்தின் உரிமையாளரும், அதில் பணிபுரிந்த இரு இளைஞர்களும் உணவகத்தின் உள்ளே சென்று தீயை அணைத்து சில பொருட்களை மீட்க முயன்றனர். அதில் தீயில் சிக்கிய மூவரும், உடல் கருகி உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்