தமிழகத்தில் இன்று 1989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது.

தமிழகத்தில் இன்று மேலும் 1989 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 40,698ல் இருந்து 42,687 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து 14வது நாளாக ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 1956 பேர், பிற மாநிலம், நாடுகளில் இருந்து வந்த 33 பேர் என 1989 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 17,911 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரேநாளில் 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் 11ம் நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.