கர்நாடக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-


கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 9 லட்சத்து 4 ஆயிரத்து 665 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 1,236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 5 ஆயிரத்து 901 ஆக உயர்ந்து உள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் 3 பேரும், பல்லாரியில் 21 பேரும், பெலகாவியில் 26 பேரும், பெங்களூரு புறநகரில் 17 பேரும், பெங்களூரு நகரில் 689 பேரும், பீதரில் 3 பேரும், சாம்ராஜ்நகரில் 14 பேரும், சிக்பள்ளாப்பூரில் 16 பேரும், சிக்கமகளூருவில் 8 பேரும், சித்ரதுர்காவில் 27 பேரும், தட்சிண கன்னடாவில் 40 பேரும், தாவணகெரேயில் 16 பேரும், தார்வாரில் 13 பேரும், கதக்கில் 6 பேரும், ஹாசனில் 24 பேரும், ஹாவேரியில் 7 பேரும், கலபுரகியில் 13 பேரும், குடகில் 17 பேரும், கோலாரில் 29 பேரும், கொப்பலில் 12 பேரும், மண்டியாவில் 31 பேரும், மைசூருவில் 54 பேரும், ராய்ச்சூரில் 6 பேரும், ராமநகரில் 10 பேரும், சிவமொக்காவில் 32 பேரும், துமகூருவில் 57 பேரும், உடுப்பியில் 12 பேரும், உத்தர கன்னடாவில் 14 பேரும், விஜயாப்புராவில் 14 பேரும், யாதகிரியில் 5 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று 1,497 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 696 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 356 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை 1 கோடியே 27 லட்சத்து 17 ஆயிரத்து 849 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

15 ஆயிரத்து 205 பேர் சிகிச்சையில் உள்ளனர். 229 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பெங்களூரு நகரில் 7 பேர், சிக்பள்ளாப்பூர், தட்சிண கன்னடா, ராய்ச்சூரில் தலா ஒருவரும் என 10 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 11 ஆயிரத்து 981 ஆக உயர்ந்து உள்ளது. 27 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.