கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருந்தது.

விமானிகளுக்கு பயிற்சி வழங்கும் PT6 ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் குறித்த விமானம் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் விமானி மாத்திரமே விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை - சீனக்குடாவில் இருந்து குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.