இன்று மன்னார் பிரதேசத்தில் சுமார் 4,300 கிலோ மஞ்சள் மற்றும் 80 கிலோ ஏலக்காயுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவற்றின் பெறுமதி 27 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. 54ஆவது படைப்பிரிவிற்குக் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவிலிருந்து இவை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.