இந்தியாவில் அரியவகை உயிரினங்கள் ஏராளமானவை காணப்படுகின்றன. இதில் பல வகை உயிரினங்கள் காக்கப்படாமல் அழிந்து வருகின்றன. அதனை காக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர். அந்த வகையில், அழிந்து வரும் உயிரினமாக கருதப்படும் சிற்றின விலங்கான மலை ஆடு என அழைக்கப்படும் இமாலய செரோவை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குளிர் பாலைவனமான வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.
அங்குள்ள ஸ்பிதி பள்ளத்தாக்கில் முதன்முறையாக மலை ஆடு தென்பட்டுள்ளது. அதனை கண்ட மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் மலை ஆட்டை பிடிக்க திட்டமிட்டனர். எனினும் அது அவர்களின் கைகளில் சிக்கவில்லை. இருப்பினும் அதன் படங்களை மட்டும் வனத்துறையினர் எடுத்துக்கொண்டனர்.
அதேநேரத்தில் மலை ஆட்டிற்கு எவ்வித தீங்கும் ஏற்படாத வகையில் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் வாழ்விடத்தில் இருந்து வழிமாறி வந்ததே இதற்கு காரணம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காதுகள் தூக்கியவாறு அதன் அருகே இரு கொம்புகளுடன் பார்க்கவே ஒருவிதமான மிரட்டலாக இருக்கும் செரோ. ஆனால் இயல்பாகவே மிகவும் கூச்ச சுபாவம் கொண்டது இந்த செரோ.
இந்த நிலையில் வனத்துறையினர் வெளியிட்ட செரோவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த செரோவை வேட்டையாடவும் வேட்டை தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.