யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மருதனார்மடம் கோரோனா தொற்றுப் பரவல் கொத்தணியின் பின்னர் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உள்பட்ட உடுவில் மற்றும் தெல்லிப்பழை கல்விக் கோட்டப் பாடசாலைகள் இன்று மூடப்பட்டன.
இந்த நிலையில் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்டத்தில் மேலும் சில பாடசாலைகளுக்கு பூட்டு
- Master Admin
- 14 December 2020
- (499)

தொடர்புடைய செய்திகள்
- 10 June 2025
- (214)
குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள்...
- 14 November 2024
- (246)
இந்த ராசி ஆண்களுக்கு திருமணதில் தீராத ஆச...
- 14 September 2024
- (659)
கோடியில் கொட்டப்போகும் பணம்: நவம்பர் முத...
யாழ் ஓசை செய்திகள்
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
- 06 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.