கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நாளை னாலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பின் கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசந்த செவண குடியிருப்பு தொகுதி மற்றும் சிறிமுத்து உயன குடியிருப்பு தொகுதி ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

அத்துடன் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்ஹிரு செவண ரயில் வீடமைப்பு திட்டம் மற்றும் பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசர உயன ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.