ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் உள்ள மசூதியில் இன்று நடைபெற்ற குண்டு வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் திடீரென குண்டு வெடித்தது. தொழுகை நடத்தியவர்களின் தலைவர் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

குண்டு வெடிப்பு மற்றும் உயிர் சேதத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.