நடிகை சித்ராவின் தற்கொலை சம்பந்தமாக அவரது கணவர் ஹேமந்திடம் மூன்றாவதாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பல உண்மைகள் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த முல்லையின் தற்கொலை பெரும் அதிர்ச்சியாகவே இருந்து வருகின்றது.
இதில் நடித்திருக்கும் கதில், முல்லை கதாபாத்திரத்திற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் என்றே கூறலாம். இந்த சீரியலின் மூலம் ஒவ்வொரு இல்லத்தரசிகளின் வீட்டுப்பெண்ணாகவே வலம்வந்தார் சித்ரா.
இந்த சீரியலில் ஆரம்பத்தில் கண்களால் ஜாடையாக பேசிக்கொண்டிருந்த கதிர், முல்லை ஜோடிகள் சமீபத்தில் சற்று நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் எடுக்கப்பட்டது.
அப்போது சித்ராவிற்கு ஹேமந்துடன் பதிவு திருமணம் நடந்த நிலையில், சீரியலில் முல்லைக்கு கதிர் முத்தம் கொடுப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டு ஒளிபரப்பானது.
இதனை சித்ராவின் கணவர் விரும்பாமல் பிரச்சினை செய்துள்ளார். தனது மகளைக் கட்டுப்படுத்துவதை தாங்க முடியாமல் சித்ராவின் தாயும் சண்டையிட்டதாகவும், இதனாலேயே சித்ரா விடுதியில் தங்கியிருந்து படப்பிடிப்பிற்கு சென்றுவந்ததாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து சித்ராவின் மரண வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ள பொலிசார். அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்று விசாரணை நடந்து வருகின்றது.
இந்த விசாரணையில் ஹேமந்த் ஏற்கனவே குடித்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சித்ராவுடன் சண்டையிட்டதும், அவருக்கும் சித்ராவின் தாயாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது போன்ற பல்வேறு விஷயங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சித்ராவின் செல்போனைக் கைப்பற்றி ஆய்வு நடத்திய பொலிசாருக்கு பல திடுக்கிடும் விஷயங்கள் சிக்கியுள்ளன. அதாவது சித்ராவின் வாட்ஸ் அப் மெசெஜ்களில் பல டெலிட் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சித்ரா தற்கொலைக்கு முன்னதாக கடைசியாக செல்போனில் அவருடைய அம்மாவுடன் பேசியிருக்கிறார். அப்போது சித்ராவின் தாயார் விஜயா, ஹேமந்தை விட்டு பிரிந்து வந்துவிடுமாறு கூறியுள்ளாராம்.
இதனால் கணவர் ஹேமந்த் மற்றும் தாயார் கொடுத்த மனஅழுத்தமே இவ்வாறான முடிவு எடுப்பதற்கான காரணம் என்று பொலிசார் ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.