சிறு வர்த்தகங்களுக்கு உதவுவதற்கும் இலங்கை பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்குமான 3.6 பில்லியன் இலங்கை ரூபா (19.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான புதிய முன்னெடுப்பொன்றை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக நிதியளிக்கப்படும் இந்த தனியார்துறை அபிவிருத்தி திட்டமானது (The Private Sector Development Project) சுற்றுலாத்துறை, தொழில்நுட்பம், மற்றும் வர்த்தக பராமரிப்பு தொழிற்துறைகள் ஆகியவற்றிலான சிறிய வணிகங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளையும் நிதியளிப்புகளையும் வழங்கும்.
வணிகங்கள் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை விஸ்தரிக்கவும் மற்றும் சிறந்த வர்த்தக நடைமுறைகளின் காரணமாக இலாபங்களை அதிகரித்துக் கொள்ளவும் கூடிய மிகவும் அவசியமான நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் COVID-19 இன் பொருளாதார தாக்கத்தை தாங்கிக் கொள்வதற்கும் இலங்கைக்கு இது உதவும்;. இந்த தொற்றுப்பரவலுக்கு முகம்கொடுக்கும் போது மீளெழுச்சித்திறனை வலுப்படுத்துவது COVID இற்கு பின்னரான பொருளாதார மீட்சிக்கான ஒரு முக்கிய படியாகும்.
´நீடித்த தாக்கங்களை அடைவதற்கான சந்தை சார்ந்த தீர்வுகளை வடிவமைக்கும் அபிவிருத்தி ஒத்துழைப்பில் தனியார்துறையை ஈடுபடுத்துவதற்கான அமெரிக்காவின் நீண்டகால உறுதிப்பாட்டை இந்த திட்டம் எடுத்துக்காட்டுகிறது,´ என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்தார்.
´மிக முக்கியமாக, சரியான நேரத்திலான இந்த உதவியானது இலங்கையில் COVID-19 இன் பொருளாதார பாதிப்புகளையும் மட்டுப்படுத்தும்,´ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்னெடுப்பானது புத்தாக்கத்தையும் தொழில்முனைவையும் ஊக்குவிக்கும் என்பதுடன், நாடு முழுவதும் கிராமப்புறங்களிலுள்ள போதிய வசதிகள் வழங்கப்படாத சமூகங்களுக்கு உதவுவதற்கு இலங்கை நிதி நிறுவனங்களுக்கு சலுகைகளையும் வழங்கும். இறுதியாக, அதிகமான பெண்களை பணிக்கு அமர்த்துவதற்கும் வணிகங்களை அது ஊக்குவிக்கும். பெண்கள் பொருளாதார ரீதியாக வலுவூட்டப்படும் போது, பொருளாதார வளர்ச்சியை உந்திச் செல்லும் அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் அவர்கள் மீண்டும் முதலீடு செய்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தொழிற்படையில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்கான திட்டம்
