கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் நாகரஒலே வனச்சரணாலயம் உள்ளது. இந்த வனச்சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் சவாரி சென்று வனவிலங்குகளை கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வனப்பகுதியில் சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளின் மோதல் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் உலவ விட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நாகரஒலே வனப்பகுதியில் புலியை காட்டு யானை துரத்தும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது பெண் காட்டு யானையை, புலி ஒன்று வேட்டையாட முயன்றுள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட காட்டு யானை, புலியை துரத்தியது. புலியை ஓட, ஓட காட்டு யானை துரத்திச் சென்றது. இதனால் யானையிடம் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என புலி அடர்ந்த காட்டுக்குள் ஓடி விட்டது. இந்த காட்சியை சுற்றுலா பயணி ஒருவர் படம் பிடித்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.