நெல்லை மாவட்டம் நாங்குநேரி மாவடி புதூரை சேர்ந்த மாயாண்டி மகள் சுபிதா (வயது 20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு நிறுவனத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு அவர் தங்கி இருந்த விடுதி அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.


இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், சுபிதா ஒரு வாலிபரை காதலித்து வந்தாராம். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.