இன்று (29) மாலை மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்த 04 சடலங்கள் ராகமை வைத்தியசாலையில் உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், குறித்த சம்பவம் காரணமாக காயமடைந்த 24 கைதிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளினால் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ பிள்ளை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதில் ஒரு தரப்பினர் சிறைச்சாலையினுள் தீ வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலை அமைதியின்மை - 4 பேர் பலி!
- Master Admin
- 29 November 2020
- (522)

தொடர்புடைய செய்திகள்
- 07 February 2025
- (235)
பணம் உங்களைத் தேடிவரணுமா? சாணக்கியரின் இ...
- 10 February 2021
- (740)
மாகாண பாடசாலைகளை திறக்க மேற்கொண்டிருந்த...
- 06 February 2025
- (102)
பெண்கள் இந்த குணமுள்ள ஆண்களுடன் மட்டுமே...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.