யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடலில் குளித்துக்கொண்டிருந்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற்போயுள்ளனர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று (03) பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தையிட்டியைச் சேர்ந்த 24 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளனர் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருபரையும், தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் இன்று மாலை வரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் மாயம்
- Master Admin
- 29 November 2020
- (415)

தொடர்புடைய செய்திகள்
- 26 March 2024
- (749)
மீன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... 3 ராச...
- 15 November 2023
- (242)
கழுத்து கருமையை உடனடியாக போக்க வேண்டுமா....
- 18 December 2023
- (180)
ஒரே வாரத்தில் கழுத்து கருமையை போக்கணுமா....
யாழ் ஓசை செய்திகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்
- 24 April 2025
இலங்கை குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
- 24 April 2025
நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை : வெளியானது உண்மை காரணம்
- 24 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.