மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நாளொன்றுக்கு 30-க்கும் குறைவான நபர்களே கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில், மதுரையில் நேற்று புதிதாக 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 20 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 533 ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் நேற்று 42 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 35 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 245 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
மதுரையில் கடந்த 2 தினங்களாக கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இதற்கிடையே நேற்று மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 34 வயது வாலிபர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பாதிப்புடன் வேறு சில பிரச்சினைகள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனுடன் சேர்த்து மதுரையில் இதுவரை 437 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு வாலிபர் பலி
- Master Admin
- 24 November 2020
- (1047)

தொடர்புடைய செய்திகள்
- 06 March 2021
- (1139)
தாய் தந்தையை துடிதுடிக்க அடித்தே கொன்ற க...
- 09 December 2020
- (300)
காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
- 01 January 2021
- (318)
அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் தமிழகத...
யாழ் ஓசை செய்திகள்
பொலிஸ் அதிகாரியை பலியெடுத்த காட்டுயானை
- 17 June 2025
கொட்டி தீர்க்கப் போகும் இடியுடன் கூடிய மழை மழை
- 17 June 2025
யாழில் இடம்பெற்ற விபத்து ; வாகன சாரதி கைது
- 17 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.