வாலாஜாவை அடுத்த அம்மூர் ரோட்டில் படவேட்டம்மன் கோவில் அருகில் அடையாளம் தெரியாத 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வாலாஜா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.