குன்னத்தூரில் பேக்கரி வைத்து நடத்தி வந்தவர் செல்வராஜ் (வயது 22). இவரது உறவினர் கண்ணன் (32). இவர்கள் இருவரும் பெருமாநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார்சைக்கிளை கண்ணன் ஓட்டிவந்தார். செல்வராஜ் பின்னால் அமர்ந்து வந்தார். பெருமாநல்லூர் ஊராட்சி அலுவலகம் அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் செல்வராஜ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கண்ணன் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.