கொழும்பு, கட்டுநாயக்க அதிவேக மார்க்கத்தில் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.

கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி சென்ற குறித்த சொகுசு பேருந்து நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த சாரதி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து காரணமாக கொழும்பு அதிவேக வீதியின் போக்குவரத்துக்கு நேற்றிரவு பல மணிநேரம் தடை ஏற்பட்டிருந்தது.