தேர்தலுக்கு முன்பே நடிகர் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து விவாகரத்து வழக்கை தாக்கல் செய்து இருந்தார். விஜய்க்கு ஒரு நடிகை உடன் தொடர்பு இருக்கிறது என்றும் அவர் கூறி இருந்தார்.

அதன் விசாரணை கடந்த ஏப்ரல் 20ம் தேதி நடைபெற்றது. அப்போது அடுத்த விசாரணை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

 

இன்று விசாரணை

தேர்தலில் ஜெயித்து விஜய் தற்போது முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார். இந்நிலையில் இன்று நடக்கும் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு விஜய் நேரில் வருவாரா அல்லது வீடியோ கால் மூலமாக ஆஜராவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.    

குற்றச்சாட்டுகளுக்கு விஜய் என்ன பதில் அளிக்க போகிறார்? இன்று விசாரணையில் என்ன நடக்கபோகிறது என விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

இருப்பினும் ரகசியமான முறையிலேயே விசாரணை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது.