தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து அடுத்த வாரம் ஓய்வு பெறவுள்ள நிலையில் தனக்கு கிடைத்த இராஜதந்திர பதவிக்கான சலுகைகளை ஏற்க மறுத்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி அன்று முடிவடைகிறது.
இந்நிலையில் இராஜதந்திர பதவியைப் பெற்று வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான திட்டங்கள் தனக்கு முன்வைக்கப்பட்டபோதும் ஓய்வு பெற்ற பின்னர் எந்த இராஜதந்திர பதவியையும் ஏற்றுக்கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த தேசப்பிரிய, எவ்வாறாயினும் அவருக்கு வழங்கப்படும் பதவி தொடர்பாக குறிப்பிடவில்லை.
கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்டுவரும் மஹிந்த தேசப்பிரிய, 2015 இல் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.