அபுதாபி, கட்டார் மற்றும் இந்தியாவில் இருந்து இன்று காலை 30 பேர் நாடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் டோஹாவிலிருந்து 18 பேரும், இந்தியாவின் சென்னையிலிருந்து 11 பேரும் அபுதாபியிலிருந்து ஒருவரும் நாடு திரும்பியுள்ளனர்.

இந்த குழுவினருக்கு பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன்பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது.