ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக பலன்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
கிரக பெயர்ச்சிகளில் குறிப்பாக சனி பெயர்ச்சிக்கு இந்து மதத்தில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

காரணம் சனிபகவான் நீதியின் கடவுளாக திகழ்கின்றார். அவர் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழும் காலத்திலேயே அதற்கான பலன்களை பாரபட்சம் இன்றி கொடுத்துவிடுவார்.
அதனால் சனி பெயர்ச்சி என்றால் அனைவரின் மனதிலும் ஒரு இனம் புரியாத பயம் ஏற்படுவது வழக்கம்.சூரிய புத்திரனான சனி பகவான் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் தான் பிறந்தார்.
சனி பகவான் பிறந்த நாள் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி மே 16 ஆம் திகதி வருகின்றது. இந்த சனி ஜெயந்தியில் அரிய ராஜ யோகம் உருவாகவுள்ளது.
இப்போது 50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய கேதார யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சிம்மம்

சனி ஜெயந்தியில் உருவாகும் கேதார யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் நிலையில் அமோக முன்னேற்றம் ஏற்படவுள்ளது.
குறிப்பாக புதிய வருமானத்துக்கான வழிகள் திறக்கும். நீண்ட நாள் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட வாய்ப்பு உருவாகும்.
நீண்ட காலமாகவே இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகள் தானாகவே அகழும். நிதி நிலையில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கும் வளர்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்

சனி ஜெயந்தி நாளில் உருவாகும் கேதார யோகத்தால் இவர்களின் மனநிலையில் தெளிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கூடிவரும். புதிய வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கான சிந்தனைகள் வெற்றியளிக்கும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மனதுக்கு பிடித்த வேலை நல்ல சம்பளத்தில கிடைக்கும். பணவரைவு சிறப்பாக இருக்கும்.
கும்பம்

சனி ஜெயந்தி நாளில் உருவாகும் கேதார யோகத்தால் கும்ப ராசிக்காரகளின் வாழ்வில் பல்வேறு வழிகளிலும் அதிர்ஷ்டத்துக்கான வழிகள் திறக்கும்.
நீண்ட காலமாக சந்தித்து வந்த பண பிரச்சனைகள் இந்த காலகட்டத்தில் நீங்கி ஒரு சிறப்பான பொருளாதார நிலை உருவாகும்.
வெளிநாட்டு நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவுகளிடம் இருந்து பெரிய தொகை பணம் பரிசாக கிடைக்க வாய்ப்புள்ளது.மனநிலையில் உற்சாகம் பிறக்கும்.
