சின்ன மருமகள் சீரியலில் நடிக்கும் நடிகை ஸ்வேதா தற்போது தன்னை ஏமாற்றிய ஆதிக்கு எதிராக அழுதுகொண்டே ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு - கதறி அழுத சின்ன மருமகள் சீரியல் நடிகை | Chinna Marumagal Serial Actress Swetha Crying Vdo

 சின்ன மருமகள் சீரியல் ஸ்வேதா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஸ்வேதா. அண்மை காலங்களில் இவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் உருவாகி வருகின்றன.

ஸ்வேதாவின் கணவர் ஆதி என்பவர் பல பெண்களிடம் பணம் மற்றும் நகை மோசடி செய்துள்ளதாக பல பெண்கள் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.

பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு - கதறி அழுத சின்ன மருமகள் சீரியல் நடிகை | Chinna Marumagal Serial Actress Swetha Crying Vdo

 

இப்படியான நிலையில் தனது கணவர் ஆதி குறித்து ஸ்வேதா இன்ஸ்டாகிராமலி ஏற்கனவே காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஆனால் அதன் பின்னரும் ஆதி சும்மா இருக்கவில்லை அவர் தான் ஸ்வேதாவின் கணவர் என்று வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். இதை எதிர்க்கும் விதமாக தற்போது ஸ்வேதா ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு - கதறி அழுத சின்ன மருமகள் சீரியல் நடிகை | Chinna Marumagal Serial Actress Swetha Crying Vdo

புதிய காணொளி

அந்த வீடியோவில் ஸ்வேதா நாங்க காதலித்துக் கொண்டு இருக்கும் போது, திடீரென பண தேவை இருப்பதாக என்னிடம் சொல்வார். அப்போ நான் வைத்திருந்த மோதிரம், செயின் எல்லாத்தையும் அவருக்காக கொடுத்தேன். 

வீட்டில் கேட்டபோது தொலைந்து விட்டது என சொன்னேன். ஆனால் இதன் பின்னர் என்னிடம் ஆதி நகைகளை விற்று விட்டதாக சொன்னார். ஒரு கட்டத்தில் நானும் ஆதியும் காதலிப்பது வீட்டில் தெரிந்துவிட்டதால், என்னை பயங்கரமாக அடித்தார்கள். அவனுக்காக நான் அவ்வளவு அடி வாங்குவேன். 

அப்போ ஆதி என்னிடம் நாம் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டால், நம்மை பிரிக்க முடியாது என்று சொன்னார். நான் இப்போ அழுறதுக்கு காரணம் அன்னைக்கு நான் செய்த தவறு தான். 

பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு - கதறி அழுத சின்ன மருமகள் சீரியல் நடிகை | Chinna Marumagal Serial Actress Swetha Crying Vdo

அன்று இரவு வீட்டை விட்டு வெளியில் வந்து ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கொண்டேன். கையில் ஒன்றுமே இல்லை கோவில் விடுதியில் தங்கினோம். ஒரு இடத்தில் அவரது குடும்பத்தினர் எங்களை ஏற்றுக் கொண்டார்கள்.

அதன் பின்னர் அவர்கள் வீட்டில் தான் இருந்தோம். ஆதி வேலைக்கு போகாததால் அவரது குடும்பத்தினர் தான் எங்களை பார்த்துக் கொண்டார்கள் அது எனக்கு பிடிக்கவில்லை நான் அவனை அழைத்துக் கொண்டு சென்னை வந்தேன்.

படிக்கும் போதே எனக்கு மாடலிங், நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் மிகவும் கஷ்டப்பட்டு எனக்கு சின்ன மருமகள் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த சீரியலில் நல்ல ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். கணவன் மனைவியாக நன்றாக வாழ வேண்டும் என நினைத்து இரபு பகல் பார்க்காமல் நடிச்சி வீட்டுக்கு ஒவ்வொரு பொருளாக வாங்கினேன்.

ஆதி மேல் கேஸ் இருப்பது தெரிந்ததும், நாளைக்கு ஃபியூச்சர்ல ஏதாவது பிரச்சனை வரப்போகிறது என்று கடன் வாங்கி செலவு செய்து அந்த கேசை நடத்தினேன்.

பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு - கதறி அழுத சின்ன மருமகள் சீரியல் நடிகை | Chinna Marumagal Serial Actress Swetha Crying Vdo

 

இப்போ வரைக்கும் நான் அந்த கடனை நான் தனியே சம்பாதித்து கட்டிடு இருக்கேன். ஆனால், நீ என்னை பற்றி கவலையே படாமல் தப்பு தப்பா வீடியோ போடுற, உனக்கு எப்படி மனசு வருது. பைதியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. 

கொஞ்கம் கூட உனக்கு குற்ற உணர்ச்சி இல்லையா? தப்புக்கு மேல தப்பு பண்ற நீ எனக்கு தேவயே இல்ல யாரு என்ன தப்பா பேசுனாலும் பரவால. 

நான் உன்னை காதலிச்சதை தவிர என்ன பாவத்தை செய்தேன், நிம்மதியாவே என்னால வாழ முடியல, தயவுசெய்து என்னை விடு என ஸ்வேதா அழுதுகொண்டே இந்த காணொளியை வெளியிட்டுள்ளார். இந்த காணொளிக்கு இணையவாசிகள் ஆறுதல் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.