ஈரானின் உயர்மட்டத் தலைமை முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும், நாட்டில் இனி செயல்படும் உச்ச தலைவர் இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் உயர் தலைவர் அலி கமனேயி பெப்ரவரி 28-ஆம் திகதி ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர், அவரது மகன் மொஜ்தபா கமனேயி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெஹ்ரான் அறிவித்தது.
ஈரானின் தலைமை
ஆனால் அதனை தொடர்ந்து அவர் பொதுவெளியில் எங்கும் தோன்றவில்லை, அவலின் அறிக்கைகள் மட்டுமே வெளியாகியது.
இந்தநிலையில், ஈரான் முழு உயர் தலைவர் குழுவும் அழிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டிற்கு தற்போது இயங்கும் தலைமை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

மொஜ்தபா கமனேயி “இருந்தால் இறந்திருக்கலாம் அல்லது மிகவும் காயமடைந்த நிலையில் இருக்கலாம், ஏனெனில் யாரும் அவரை காணவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மியாமியில் நடைபெற்ற “Future Investment Initiative Priority Summit” நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளால் ஈரானின் தலைமை மற்றும் ராணுவ சக்தி அழிக்கப்பட்டு, நாட்டின் உயர் அதிகாரம் செயலிழந்த நிலையில் இருக்கிறது எனவும் கூறினார்.
உயிருடன் உள்ளாரா
“ஈரானின் கடற்படை அழிந்துவிட்டது, அது வளைகுடாவில் முழுமையாக மூழ்கியுள்ளது… அவர்களின் வான்படை முழுமையாக முடிந்தது… எதிரி-வான்படைகள் மற்றும் தொடர்பு அமைப்புகள் முழுமையாக அழிக்கப்பட்டு முடிந்துவிட்டன” ஈரானின் ஆயுதங்கள் அழிக்கப்பட்டு, ஏவுகணை மற்றும் ட்ரோன் தொழிற்சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன, அவர்களது பாதுகாப்பு தொழிற்துறை முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது” என்றும் தெரிவித்தார்.

பெப்ரவரி 28 தாக்குதலில் அலி கமனேயி கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் மொஜ்டபா கமனேயி புதிய உயர் தலைவர் என நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் பொதுமக்கள் முன்னிலையில் காணப்படவில்லை.
அமெரிக்க அதிகாரிகள் அவர் போர் போது காயமடைந்ததாக கூறுகின்றனர். ஈரானின் காவல் படை மற்றும் பிற ராணுவ அலகுகள் தற்போது மைய கட்டுப்பாட்டின்றி செயல்படுவதாகத் தெரிகிறது. மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து ட்ரம்ப் நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்தியிருந்தார்.
மார்ச் 16-ஆம் திகதி, அவர் புதிய தலைவரின் உயிர் இருப்பது உறுதியா இல்லை என, விமான தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறிய தகவல்களைப் பற்றிச் சொல்லியுள்ளார்.
வான்வழித் தாக்குதல்
மார்ச் 16 அன்று, வான்வழித் தாக்குதலில் அவர் காயமடைந்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, ஈரானின் புதிய தலைவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.
"அவர் இறந்துவிட்டாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. யாரும் அவரைப் பார்க்கவில்லை என்று நான் கூறுவேன், இது வழக்கத்திற்கு மாறானது," என்று வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்வில் டிரம்ப் கூறியிருந்தார்.

இதற்கிடையில், ஈரான் இப்போது பேச்சுவார்த்தைகளை நாடுவதாகவும், ஒரு ஒப்பந்தத்தை முன்னெடுப்பதாகவும் ட்ரம்ப் மேலும் கூறினார்.
"அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள அவர்கள் கெஞ்சுகிறார்கள்," என்றும் மியாமியில் ஆற்றிய தனது உரையின்போது ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
