எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் குவிந்து கிடக்கும். அப்படியானவர்கள் என்னென்ன எண்களில் பிறந்திருப்பார்கள் என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

பணம் சம்பாதிப்பதில் கில்லாடி எண்கள்

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்.. எண்கணிதம் சொல்வது என்ன? | These Dates Born People Earning Money Numerology

எண் 4  
  • எண் 4 -ல் பிறந்தவர்கள் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்களிடம் உள்ள திறமை வெளிப்படுத்தி, ஊதியம் பெற்றுக் கொள்வார்கள். எண் 4 ஆனது யதார்த்த நடைமுறை, கடின முயற்சி மற்றும் புத்திக்கூர்மையுடன் தொடர்புடையது. இதனால் இவர்கள் எதையும் திட்டமிட்டு செய்யும் ஆற்றல் கொண்டவர்கள். பணத்தை திறமையான முறையில் முதலீட்டு அதனை பன்மடங்கு பெறுகச் செய்வார்கள். இதுவே இவர்களின் வாழ்க்கையின் வெற்றியாகும்.
எண் 8
  • எண் 8 பிறந்தவர்கள் செல்வத்தின் மீது இயற்கையான ஈர்ப்பு கொண்டவர்கள். செழிப்பு, வெற்றி மற்றும் நிதி நிபுணத்துவத்துடன் தொடர்புடையதாக இருப்பதால் பணத்தை நன்கு புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். நீண்ட கால நிதி வெற்றியை அடைய திறமையுடன் செயற்படுவார்கள். 
  • 13 ஆம் தேதியில் பிறந்தவர்கள் சிறந்த நிதி பகுப்பாய்வு திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அத்துடன் நடைமுறையை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். புத்திசாலித்தனமாக செயற்பட்டு பணத்தை சேமித்து வைப்பார்கள். முதலீடுகளால் அடுத்தக்கட்டத்திற்கு செல்வார்கள. கோடீஸ்வரர்களில் ஒருவராக இருப்பார்கள்.