தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (93), உடல்நலக் குறைவால் காலமானார்.

சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. தகவல் அறிந்ததும் முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக சாலை மார்க்கமாக காரில் சேலம் புறப்பட்டுச் சென்றார்