ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட குணங்களுடன் மிக நெருங்கிய வகையில் தொடர்பை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள்.
இவர்கள் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியான வகையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றியின் உச்சத்தை தொடுவார்களாம். அப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதியாக புதன் பகவான் இருப்பதால், இந்த ராசியில் பிறந்த பெண்கள் அறிவாளிகளாக இருப்பார்கள்.
இவர்கள் எந்த முறையில் பணியாற்றினாலும், தங்களின் திறமையால் மற்றவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் தன்மையை கொண்டிருப்பார்கள்.
இவர்கள் வாய்ப்புகளில் இருக்கும் பிரச்சினைகளை பார்ப்பததை விடுத்து பிரச்சினைகளிலும் வாய்ப்பை தேடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பணம் சம்பாதிப்பதிலும் அதனை சரியான துறையில் முதலீடு செய்து பணத்தை பெருக்குவதிலும் கில்லாடிகளாக இருப்பார்கள்.
கும்பம்
சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த கும்ப ராசி பெண்கள் பிறவியில் இருந்தே மிகவும் திறமைசாலிகளாகவும் புத்திக்கூர்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் எவ்வளவு கடினமான சூழ்நிலையில் இருந்து தங்களை தாங்களே விடுவித்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகளையும் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றியடைந்துவிடுவார்கள். இவர்களின் கடின உழைப்பும் சரியான முடிவெடுக்கும் தன்மையும் இவர்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கும் ராசி அதிபதி புதன் என்பதால், இவர்களும் அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள்.
இவர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் இழந்துவிட்ட நிலையில் கூட தங்களின் தன்னம்பிக்கையால் இழந்ததை விடவும் பல மடங்கு பெறுவதற்கான வழியை கண்டுப்பிடித்துவிடுவார்கள்.
இவர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பதிலும் வாய்ப்புகளை தங்களின் முன்னேற்றத்துக்காக பயன்படுத்திக்கொள்வதிலும் வல்லவர்களாக இருப்பார்கள்.