ஜோதிட சாஸ்திரத்தின் படி பல கிரகங்ககள் தங்களின் ராசியை மாற்றிக்கெள்ளும். கிரகங்களின் பெயர்ச்சி வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்கும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருவதோடு, தேவர்களின் குருவான குருபகவானின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணித்து வருகிறார்.
இந்த அபூர்வ பயணம் மற்ற ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவானின் இந்த பூரட்டாதி பயணம் சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது.
இதனால் சில ராசிகளின் அதிஷ்டத்தை பார்த்தோம். இந்த பதிவில் யாரெல்லாம் துரதிஷ்டம் பெறுவார்கள் என்பதை பார்க்கலாம்.

கடகம் |
- சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வது கடக ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்களை கொடுக்கும்.
- தற்போது இருக்கும் கால கட்டத்தில் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உண்டாகும்.
- குடும்பம் சமூகம் பணியிடம் என எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க நேரிடும்
|
சிம்மம் |
- சிம்ம ராசிக்ளுக்கு இந்த சனி பெயர்ச்சி கெட்ட பலன்களை கொடுக்கும்.
- சனி சிம்ம ராசியின் ஏழாவது வீட்டில் சஞ்சரிப்பதால் பல்வேறு துறைகளில் பிரச்சனைகளை சந்திக்கலாம்.
- மார்ச் மாதத்தின் பின்னர் தான் சிக்கல்கள் அதிகமாக இருக்கும்.
|
மகரம் |
- மகர ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சிபல்வேறு கவலைகளை கொடுக்கும்.
- நீங்கள் வாழ்க்கையில் மன மற்றும் உடல்ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- இதுமட்டுமின்றி பணியிடத்தில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படுவதால் பணிச்சுமை அதிகரிக்கும்.
- எடுத்த வேலைகள் முடிக்கப்படாமல் பிரச்சனைகளில் மாட்டுவீர்கள்.
|