ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும். 

பயம் என்ற நாமமே அறியாத பெண் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன? | Which Women Zodiac Signs Are Fearless

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மிகவும் தைரியமானவர்களாகவும் பயம் என்ற நாமமே அறியாதவர்கள் போலும் இருப்பார்கள் அப்படிப்பட்ட குணம் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

பயம் என்ற நாமமே அறியாத பெண் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன? | Which Women Zodiac Signs Are Fearlessமேஷ ராசியில் பிறந்த  பெண்கள் தன்நம்பிக்கை மற்றும் தைரியத்தின் மறு உருவமாக இருப்பார்கள். இவர்களுக்கு சுதந்திரமற்ற இடங்களில் இருப்பது அறவே பிடிக்காத விடயமாக இருக்கும். 

இவர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த யாருக்கும் பயப்பட மாட்டார்கள். இயல்பிலேயே இவர்கள் யாருக்கும் எளிதில் கட்டுப்படமாட்டார்கள்.

இந்த ராசி பெண்கள்  எவ்வளவு கடினமான சூழலிலும் போராடி வெற்றிபெறும் குணத்தை கொண்டிருப்பார்கள். அச்சம் என்பது இவர்களின் அகராதியிலேயே இருக்காது. 

கடகம்

பயம் என்ற நாமமே அறியாத பெண் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன? | Which Women Zodiac Signs Are Fearless

கடக ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் முடிவில் எப்போதும் உறுதியுடன் இருப்பார்கள். இவர்கள் இலக்கை நோக்கி முன்னேறுவதில் தங்களின் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். 

இவர்கள் யாருக்கு கீழும் தொழில் புரியவோ அல்லது வாழ்க்கை நடத்தவோ ஒருபோதும் விரும்பவே மாட்டார்கள். 

இவர்கள் யாருக்கும் பயப்பம மாட்டார்கள். குறிப்பாக ஆண்களுக்கு ஈடு கொடுத்து இவர்கள் செய்யும் விடயங்களை துணிந்து செய்யும் தன்மை இவர்களிடம் இருக்கும். 

மகரம்

பயம் என்ற நாமமே அறியாத பெண் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன? | Which Women Zodiac Signs Are Fearless

 மகர ராசி பெண்கள் சனி பகவானி ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்கள் நீதியின் மறு வடிவமாக இருப்பார்கள். 

இவர்களின் பேசுவதற்கே பலரும் தயங்கும் அளவுக்கு கோபம் வந்தால் யாராக இருந்தாலும் துணிந்து எதிர்த்து நிற்கும் குணம் இவர்களுக்கு அமைந்திருக்கும். 

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் இவர்கள் யாருக்கும் அஞ்சுவதும் கிடையாது. யாருக்கும் அடங்கி போவதும் கிடையாது.