பொதுவாக நம்மில் சிலர் நன்றாக படித்திருப்பார்கள் ஆனால் அவர்கள் காரணமே இல்லாமல் ஏமாறுவார்கள்.
இது அவர்களின் முட்டாள்தனத்தை உணர்த்துகிறது என சாணக்கியர் கூறுகிறார்.
முட்டாள்களாக இருப்பவர்கள் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் மற்றவர்களை முழுமையாக நம்பி விடுவார்கள். இதனால் அவர்கள் மோசடிக்கு ஆளாகிறார்கள்.
எனவே, ஜோதிடத்தின்படி, குறிப்பிட்ட சில ராசிகளில் உள்ளவர்கள் தான் இந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறுகிறது.
அந்த வகையில் முட்டாள்களாக காலத்தை கழிக்கும் ராசியினர் யாவர்? என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. மேஷ ராசிக்காரர்கள்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் நம்பிக்கை மற்றும் உறுதியான தன்னம்பிக்கைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இதனை பயன்படுத்திக் கொண்டு பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்படுவார்கள். மேலும், அவர்களுக்கு ஒரு வகையான மன கிளர்ச்சி இயல்பாகவே இருக்கும். இதனால் அவசர முடிவுகளாலும் ஏமாற்றம் அடைவார்கள்.
2. மிதுன ராசிக்காரர்கள்
மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் ஈடுபட விரும்புவார்கள். இதனை பயன்படுத்திக் கொண்டு பலர் இவர்களை ஏமாற்றி செல்வார்கள். இதனை அவர்கள் உணர்ந்தாலும் எந்தவிதமான முடிவுகளும் எடுக்கமாட்டார்கள். சில சமயங்களில் மற்றவர்களின் வார்த்தைகளை நம்பி பெரிய பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வார்கள்.
3. துலாம் ராசிக்காரர்கள்
இவர்கள் தங்கள் உறவுகளின் நல்லிணக்கத்தையும் அமைதியையும் எதிர்பார்ப்பார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் மற்றவர்களுடன் மோதல் வைத்து கொள்ளமாட்டார்கள். இதனை பயன்படுத்திக் கொண்டு மற்றவர்கள் இவர்களை ஏமாற்றுவார்கள். சிக்கல் வந்தால் தானாக முடிவெடுக்க தெரியாதவர்களாக இருப்பார்கள். குடும்பத்திற்காக எதனையும் செய்வார்கள்.
4. தனுசு ராசிக்காரர்கள்
தனுசு ராசிக்காரர்கள் திறந்த மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கை துணையை அதிகமாக நம்புவார்கள். மற்றவர்களை நம்பும் குணமே ஒரு கட்டத்தில் இவர்களுக்கு எதிரியாக வந்து நிற்கலாம்.