பொதுவாக திருமணமாகி புதிய வாழ்க்கைக்குள் நுழையும் ஒவ்வொரு பெண்களும் கூடிய விரைவில் ஒரு குழந்தை தாயாக வேண்டும் என நினைப்பார்கள்.

அதிலும் குறிப்பாக மகனுக்கு திருமணம் முடிந்து விட்டாலே அம்மாக்களுக்கு எப்போது என்னுடைய பேர குழந்தைகளை பார்ப்போம் என்ற ஆசை வந்து விடும். 

இதனால் செல்லும் கோயிலில் எல்லாம் நேர்த்தி கடன்கள் வைப்பார்கள். மாறாக அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் தாய்மை வரம் கிடைப்பதில்லை.

குழந்தை பாக்கியம் இல்லையா? வருத்தத்தில் இருக்கும் தம்பதிகளுக்கான பரிகாரம் | Powerful Astrology Remedy For Getting Babyபல போராட்டங்களுக்கு பிறகு தான் சில பெண்கள் தாய்மை அடைகிறார்கள். அப்படி நீண்ட நாட்கள் காத்திருந்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆன்மீக வழியில் சில முயற்சிகளை செய்யலாம்.

அந்த வகையில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் சில பரிகாரங்களை செய்தால் குழந்தையை பெற முடியும். அப்படியான பரிகாரங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

குழந்தை பாக்கியம் இல்லையா? வருத்தத்தில் இருக்கும் தம்பதிகளுக்கான பரிகாரம் | Powerful Astrology Remedy For Getting Baby

  • குழந்தை பாக்கியம் பெறுவதற்கான பரிகாரம் செய்யும் போது கணவன் - மனைவி இருவரும் 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.
  • அந்த நாட்களில் மறந்தும் கூட இருவரும் குடும்ப வாழ்க்கையை வாழக் கூடாது.
  • வளர்பிறை துவங்கிய பின்னர் ஒரு நாள் தம்பதிகளின் பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் பெற்று விட்டு விநாயகருக்கு, பிறகு குலதெய்வத்திற்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
  • சஷ்டி விரதம் இருந்து முருகன் வள்ளி தெய்வானைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். 
  • இவற்றை செய்து முடித்த பின்னர் மறுநாள் காலை தானியங்களை ஒரு துணியில் கட்டி முடிச்சு போட்டு யாரும் பார்க்காத வண்ணம் ஒரு இடத்தில் சேமித்து வைக்கவும்.

குழந்தை பாக்கியம் இல்லையா? வருத்தத்தில் இருக்கும் தம்பதிகளுக்கான பரிகாரம் | Powerful Astrology Remedy For Getting Baby

  • இந்த பரிகாரத்தை பெண்கள் தான் செய்ய வேண்டும். 
  • இதனை தொடர்ந்து ஐந்து முறை செய்ய வேண்டும்.
  • இப்படி தொடர்ந்து செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • குழந்தை பாக்கியம் கிடைத்த பின்னர் இந்த முடிச்சுகளை ஓடும் தண்ணீரில் வீசி விட வேண்டும். இதை பெண்கள் தான் செய்ய வேண்டும்.