ஜோதிட சாஸ்திரம் மற்றும் எண் கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவருடைய எதிர்காலத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ளாமல், மிகவும் ரகசியமாகவே வாழ்வார்கள்.
அப்படிப்பட்ட திகதிகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவல் பார்க்கலாம். எண் கணிதத்தின் அடிப்படையில் 4, 13, 22 அல்லது 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் மர்மம் நிறைந்தவர்களாகவும் ரகசியங்களை மறைந்து வைத்திருப்பவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்களின் வாழ்க்கை பாதை எண் 4 ஆக இருப்பதால் இவர்களிடம் வெளிப்படை தன்மை குறைவாகவே இருக்கும். இவர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்கழள யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்புவதில்லை.
அவர்கள் தங்கள் உணர்வுகளையும், எண்ணங்களையும் மற்றவர்களிடம் பகர்ந்துக்கொள்வதை பாதுகாப்பற்றதாக நினைக்கின்றார்கள்.இவர்கள் தனிமை விரும்பிகளாக இருக்கும் அதே நேரம் மற்றவர்களுடன் வாழ்க்கை சம்பந்தமான விடயங்கள் பற்றி பேச விரும்புவதில்லை.
எவ்வளவு பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து விடுவார்கள். மிகவும் நெருக்கமானவர்களிடம் மட்டுமே முக்கியமான விடயங்கள் பற்றி பகிர்ந்துக்கொள்ள விமும்புகின்றார்கள்.
தங்கள் பிரச்சனைகளை, சிரமங்களை மற்றவர்களுடன் கூறுவதால் அதுவே பலவீனமாகவம் ஆபத்தாகவும் மாறிவிடும் என்பதில் மிகவும் கவனம் செலுத்துவார்கள்.
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தங்கள் சொந்த முடிவுகளை மதிக்கிறார்கள். இதனால் தங்களின் துணையிடம் மாத்திரமே நெருக்கமாக இருக்கின்றார்கள்.
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்கள் கண்களுக்கு மர்மம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு பல துறைகள் சார்ந்த அறிவு நிச்சயம் இருக்கும்.