கொரோனா அச்சம் காரணமாக, வடமாநில வங்கி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர் தரும் செல்லானை அயர்ன் பாக்ஸ் கொண்டு சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் குறைந்த அளவு ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வடமாநில வங்கி ஊழியர் ஒருவரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.


அதில் முகக்கவசம் மற்றும் கையுறைகளுடன் பணியாற்றும் வங்கி ஊழியர், வாடிக்கையாளர் தரும் செல்லானை கைகளால் தொடாமல் இடுக்கி போன்ற கருவியால் பிடித்து மேஜை மீது வைத்து அயர்ன் பாக்சால் சுத்தம் செய்த பின்பு பயன்படுத்துவதாக அந்த வீடியோ அமைந்துள்ளது.