பொதுவாக எல்லா உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டது என்றாலும் ஒவ்வொரு உயிரினத்திற்கு ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும்.

நம் வசிக்கும் வீட்டில் குருவி, பறவைகள் என பல உயிரினங்கள் அவ்வப்போது வரக்கூடும்.எனவே எந்த உயிரினங்கள் நம் வீட்டிற்கு வந்தால் அதிர்ஷ்டம் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சிட்டுக்குருவி

இந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் தவறியும் விரட்டிராதீங்க... ஏன்னு தெரியுமா? | Is It A Good Omen If Sparrow Or Pigeon Enter House

 

வீட்டுக்குள் சிட்டுக்குருவி வந்தால் அதனை ஒருபோதும் துரத்தக்கூடாது. பொதுவாக இலகுவில் சிட்டுக்குருவி வீட்டிற்குள் வராது.

அப்படி சிட்டுக்குருவி வீட்டிற்குள் வந்தால் அது அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நல்ல சகுனமாக கருதப்படுகிறது.சிட்டுக்குருவி துழையும் வீட்டினுள் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஆந்தை

இந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் தவறியும் விரட்டிராதீங்க... ஏன்னு தெரியுமா? | Is It A Good Omen If Sparrow Or Pigeon Enter House

 

ஆந்தையின் தோற்றம் காரணமாக பலருக்கும் அதனை பிடிப்பதில்லை ஆனால் ஆந்தை என்பது மகாலட்சுமியின் வாகனமாகும்.

வட மாநிலங்களில் அதிர்ஷ்ட லட்சுமி ஆந்தையை தான் தனது வாகனமாக கொண்டுள்ளார். எனவே ஆந்தை உங்கள் வீட்டிற்குள் நுழைவது அதிர்ஷ்டத்தை அள்ளித்தரக்கூடிய விடயமாகும்.

புறா

இந்த பறவைகள் வீட்டுக்கு வந்தால் தவறியும் விரட்டிராதீங்க... ஏன்னு தெரியுமா? | Is It A Good Omen If Sparrow Or Pigeon Enter Houseபுறா வீட்டிற்கு வருவதால் செல்வ வளம் மேலும் அதிகரிக்கும் என்பது ஐதீகம். எனவே புறாக்களுக்க்கு தானியம் போடுவது தண்ணீர் வைப்பது, போன்றவற்றால் நமக்கு புண்ணியம் கிடைக்கும்.

புறா மகா லட்சுமியின் உருவமாக கருதப்படுகின்றது.புறா வீட்டிற்குள் வந்தாலோ அல்லது கூடு கட்டினாலோ வீட்லில் பணத்திற்கு பஞ்சமே இருக்காது.