பொதுவாக எல்லா விடயங்களுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் சில முறைகள் காணப்படுகின்றது. அந்தவகையில் அடிக்கடி கோபம் வருவதற்கும் வாஸ்துவில் காரணங்கள் கூறப்படுகின்றது.

நாம் வீட்டு சூழல் சில சமயம் எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதாக அமையும். இவ்வாறான நிலைமை உங்களை உளவியல் ரீதியாக பாதிப்பதுடன் வீட்டிற்கும் துர்திஷ்டத்தை கொண்டுவரும் என வாஸ்து சாஸ்திர  நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 

எதற்கெடுத்தாலும் கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | How To Control Your Anger Vastu Tips

அந்த வகையில் வாஸ்துவில் குறைபாடுகள் இருந்தால், கோபத்தை கட்டுப்படுத்த முடியாது,  இவ்வாறு அடிக்கடி கோபப்படுபவர்கள் என்ன வாஸ்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வீடு கட்டுவது வாஸ்து படி இல்லாவிட்டால், வீட்டில் இருப்பவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்பது நம்பிக்கை. வாஸ்து நிபுணர்களும் இதையே குறிப்பிடுகின்றார்கள். வாஸ்து உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

எதற்கெடுத்தாலும் கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | How To Control Your Anger Vastu Tips

வீடு மிகவும் அழுக்காக இருந்தால், நீங்கள் எப்போதும் கோபப்படுவீர்கள் என்று கூறப்படுகிறது. எனவே முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், காலையில் எழுந்ததும் கைகளை ஒன்றாக சேர்த்து உள்ளங்கைகளை 5 நிமிடம் பார்த்துக்கொள்வதன் மூலம் மனம் அமைதியடைகின்றது. இதன் பின்னர் இஷ்ட தெய்வத்தை மனதில் பிராத்தனை செய்துவிட்டு நாளை தொடங்கினால் நாள் இனிமையானதாக அமையும். 

எதற்கெடுத்தாலும் கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | How To Control Your Anger Vastu Tips

மன அழுத்தத்தை  குறைக்கவும், கோபம் வராமல் தடுக்கவும் எந்த சூழ்நிலையிலும் தென்கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டின் கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வழிபடுவதால் வீடடில் நேர்மறை ஆற்றல்கள் ஈர்க்கப்படும். இதனால் மனம் அமைதி அடையும்.

எதற்கெடுத்தாலும் கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | How To Control Your Anger Vastu Tips

வீட்டில் உள்ள சுவர்களின் நிறமும் நமது மன ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும். எந்த சூழ்நிலையிலும் வீட்டில் சுவர்களில் அடர் நிறங்களை பயன்படுத்த கூடாது.இது கோபத்தை தூண்டுவதாகவ அமையும்.

எதற்கெடுத்தாலும் கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க | How To Control Your Anger Vastu Tips

கோபமாக இருக்கும் போது கல் உப்பை தண்ணீர் போட்டு அந்த பாத்திரத்தை அறையில் வைப்பதால் அறையில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி மனம் தெளிவடையும். அதனால் கோபம் குறையும்.