கொரோனா வைரஸ் தொற்று நீண்ட காலத்திற்கு நீடித்து இருக்க வாய்ப்பு உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
பெருந்தொற்று பாதிப்பு தொடர்பாக மதிப்பிட, அந்த அமைப்பின் அவசரகால நிர்வாகக்குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைதொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று நீண்ட காலத்திற்கு நீடித்து இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், உயிரிழப்புகளின் தாக்கம்,நாடுகள் மீது சமூக-பொருளாதார அழுத்ததை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தொற்று தொடர்பாக இதுவரை அறியப்படாத ஆபத்துகள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருவதோடு, நோய்த்தொற்று பரவல், வைரசின் சாத்தியமான பிறழ்வுகள், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை தொடர்பாக கூடுதலாக அறிய முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.