பணத்தின் தேவை என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அன்றாடம் இருக்கக்கூடிய ஒரு விஷயமாகும். கடன் என்ற ஒன்று ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படாமல் இருப்பதற்கு அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணம் இருந்தாலே போதும்.

கஷ்டமான சூழ்நிலையில் நாம் இருக்கும் பொழுது யாராவது ஒருவரின் ரூபத்தில் நமக்கு உதவி கிடைத்தால் அந்த உதவியை நாம் தெய்வத்தின் அருளால் கிடைத்தது என்றே கருதுகிறோம்.

அவ்வாறு நமக்கு இக்கட்டான சூழ்நிலையில் பணத்தேவை ஏற்படும்பொழுது ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் நம்மை வந்தடைந்தால் அது நமக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். 

பண தேவையை பூர்த்தி செய்ய செம்பருத்தி பரிகாரம் | Hibiscus Remedy To Meet Money Needsபணம் நம்மை வந்தடைய செம்பருத்தி பூவை வைத்து மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். இதற்கு நமக்குத் தேவைப்படுவது வெறும் மஞ்சள் தூளும், செம்பருத்தி பூவும் மட்டுமே.

ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு செம்பருத்தி பூவை போடும் அளவிற்கு ஒரு சிறிய கிண்ணம் ஆக கூட இருக்கலாம். பிளாஸ்டிக்கை தவிர்த்து மற்ற எந்த உலோகமாக இருந்தாலும் பரவாயில்லை.

அதில் நாம் சுத்தமான நீரை பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் கஸ்தூரி மஞ்சள் தூளை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பண தேவையை பூர்த்தி செய்ய செம்பருத்தி பரிகாரம் | Hibiscus Remedy To Meet Money Needsபிறகு அதில் சிவப்பு நிற ஒற்றை செம்பருத்தி பூவை போட வேண்டும். கிழக்கு பார்த்தவாறு நின்றபடி அந்த கிண்ணத்தை மூன்று முறை தலை முதல் பாதம் வரை சுற்ற வேண்டும்.

ஆண்கள் செய்கிறார்கள் என்றால் அவர்களே சுற்றிக்கொள்ள வேண்டும். பெண்கள் செய்வதாக இருந்தால் அவர்களின் கணவர் சுற்றலாம் அல்லது அவர்களே சுற்றிக் கொள்ளலாம்.

வலம் இருந்து இடப்புறமாக மட்டுமே சுற்ற வேண்டும். பிறகு இதை கால் படாத இடத்தில் அப்படியே ஊற்றி விட வேண்டும். அவ்வளவுதான் இந்த பரிகாரம்.

இப்படி செய்வதன் மூலம் ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் நம்மை வந்தடையும். இந்த பரிகாரத்தை நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.

எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். நியாயமான கோரிக்கைக்காக பணத்தை எதிர்பார்த்து இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் பலன் அடையலாம்.