கிருத்திகா உதயநிதியின் படத்திலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் குக் வித் கோமாளி அஸ்வின்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அஸ்வின், இதற்கு முன்பாக பல சின்னத்திரை தொடர்கள், குறும்படங்களில் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளிக்கு பின்னர் ரசிகைகளின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த அஸ்வின், 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

இதற்காக அவர் தன்னை தயார்படுத்தியும் வந்த நிலையில், தற்போது கிருத்திகா உதயநிதியின் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அஸ்வின், எனக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அதை ஒரு வெப் சீரிஸ்ஸாக எடுக்க திட்டமிட்டிருந்தனர். எனக்கு வெள்ளித்திரையில் வர வேண்டும் என்பது தான் ஆசை. அதனால் தான் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன் என தெரிவித்துள்ளாராம்.

தற்போது, இந்த படத்தில் அஸ்வினுக்கு பதில் பிரபல மலையாள நடிகர் ஜெய்ராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.