நுவரெலியா - இராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இராகலை சூரியகந்தை பகுதியில் இன்று (18) அதிகாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அக்கரைப்பற்று பகுதியிலில் இருந்து ஹட்டன் பகுதிக்கு சென்ற கார் ஒன்று நுவரெலியா – வலப்பனை பிரதான வீதியில் இருந்து வீதியை விட்டு விலகி குறித்த கார் சுமார் 100 பள்ளத்தில் உள்ள நுவரெலியா இராகலை பிரதான வீதிக்கு பாய்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
மேற்படி காரில் இரண்டு பேர் பயணித்து உள்ளதாகவும், இதில் இருவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக இராகலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் - இருவர் படுகாயம்
- Master Admin
- 18 May 2021
- (806)

தொடர்புடைய செய்திகள்
- 21 December 2024
- (70)
திருமணத்துக்கு பின் ராஜ வாழ்க்கை வாழும்...
- 15 June 2025
- (69)
இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வை...
- 15 June 2025
- (1)
இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்கு துரோகம...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.