கொழும்பு மாநகர சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் மாத்திரம் இதுவரை 34 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.
இன்றைய தினத்தில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பு நகரில் வசிப்பவர்கள் மற்றும் நகரில் பணிபுரியும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக வைத்தியர் தெரிவித்தார்.
கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படும் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் காரணமாக புதிய கொவிட் தொற்றாளர்களில் வீழ்ச்சியை காணக்கூடியதாக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
புதுவருட கொவிட் கொத்தணி ஆரம்பமான பின்னர் இதுவரை கொழும்பு நகர எல்லையில் 800 கொவிட் தொற்றாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.
கொழும்பு நகர எல்லை தொற்றாளர்கள் குறித்து வௌியான தகவல்
- Master Admin
- 16 May 2021
- (616)

தொடர்புடைய செய்திகள்
- 30 March 2024
- (281)
செவ்வாழை ஆண்மை குறைபாட்டை போக்குமா.. இத்...
- 26 January 2021
- (1281)
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம்...
- 06 December 2023
- (1103)
விஷம் அருந்தியவரை காப்பாற்ற உடனே என்ன செ...
யாழ் ஓசை செய்திகள்
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
- 14 March 2025
தொடர் மாற்றத்துக்குள்ளாகும் தங்க விலை
- 14 March 2025
இரவு நேர சேவையில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்
- 14 March 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.