மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள் மடத்தில் இன்று (12) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று மாலை பெரிய கல்லாறில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியை கல்முனையில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து கொண்டிருந்த பஸ் மோதி தள்ளியுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் அதில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்தில் பெரிய கல்லாறு பிரதான வீதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான அழகப்பர் மதிராஜ் (49 வயது) என்பவர் உயிரிழந்ததுடன் அவரது சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பஸ்சின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டு.வில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி - இருவர் படுகாயம்!
- Master Admin
- 12 May 2021
- (505)

தொடர்புடைய செய்திகள்
- 19 June 2025
- (69)
அதிர்ஷ்டத்தை பாக்கெட்டில் வைத்திருக்கும்...
- 19 May 2021
- (606)
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் - வெளிநாட்ட...
- 25 February 2021
- (567)
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை...
யாழ் ஓசை செய்திகள்
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
முச்சக்கர வண்டி தடம்புரண்டதில் இளம் யுவதி பலி
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.