ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பரவியது. இதனால், ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்ற உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சேர்ந்த பிரஷித் கிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளரான பிரஷித் கிருஷ்ணா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரிலும் ஸ்டாண்ட்-பை வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.