சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஐதராபாத்தில் 3 வாரங்களுக்கு மேல் முகாமிட்டு இந்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். அண்ணாத்த படத்தை முடித்ததும் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ரஜினி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த படத்தை டைரக்டர்கள் கார்த்திக் சுப்புராஜ் அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. தேசிங்கு பெரியசாமி வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமானார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்த இரு இயக்குனர்களும் ரஜினியிடம் கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் யாரை ரஜினி தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மீண்டும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
- Master Admin
- 04 May 2021
- (706)
தொடர்புடைய செய்திகள்
- 25 June 2023
- (571)
பீட்ரூட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெர...
- 05 May 2021
- (1353)
மாமியார் கர்ப்பம் ! மகன் திருமணத்தில் மர...
- 28 April 2021
- (537)
தொற்று அபாயங்களை குறைக்க வருங்காலத்தில்...
யாழ் ஓசை செய்திகள்
யாழில். சருகு புலியை மடக்கி பிடித்த ஊரவர்கள்
- 09 June 2026
தேசிய ரீதியில் சாதித்துள்ள யாழ்.மாணவி
- 08 June 2026
உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு
- 08 June 2026
வாகன இலக்க தகடு அச்சிடல் ஆரம்பம்
- 08 June 2026
சினிமா செய்திகள்
Gayathri Sri’s Viral Glam Vacation Looks 👀❤️
- 30 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
